
இயந்திர பிரச்சினை காரணமாக இலங்கைக் கடற்பரப்பில் செயலிழந்த இந்திய மீன்பிடி இழுவை படகு, சர்வதேச கடல் எல்லைக் கோட்டில் இந்திய கடலோரக் காவல்படையிடம் இன்று காலை இலங்கை கடற்படையினர் கையளித்துள்ளனர்.
பருத்தித்துறையில் இருந்து 26 கடல் மைல் தொலைவில் இந்த இழுவை படகு கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
‘பைரவகாளி’ என்ற விசைப்படகு செப்டம்பர் 25ஆம் திகதியன்று இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற நிலையிலேயே இயந்திரம் செயலிழந்துள்ளது.
இதேவேளை படகில் இருந்த ஒன்பது இந்திய கடற்றொழிலாளர்களுக்கு உணவு, பானம் மற்றும் மனிதாபிமான உதவிகளை இலங்கை கடற்படையினர் வழங்கியுள்ளனர்.
பிற செய்திகள்