வல்லை வைத்தியசாலையில் கடமைகளை பொறுப்பேற்கும் கமலநாதன்!

கொழும்பு முயற்சி  வீண் போக தனது இடமாற்றக் கடிதத்தை பெற்றுக் கொண்டு வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு பணியிட  மாற்றத்தைப் பெற்று முன்னாள் மந்திகை ஆதார வைத்தியசாலைப் பொறுப்பு வைத்தியர் கமலநாதன் நாளைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மந்திகை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற முறைகேடுகளால்  பணி இட மாற்றம் பெற்ற வைத்தியர் கமலநாதன் தனது இடமாற்றத்தை நிறுத்துவதற்காக” சிக்” லீவு போட்டுவிட்டு கொழும்புக்கு சென்றார்.

புதிய வைத்தியர் கடமை ஏற்றதும் அவரிடம் வழங்க வேண்டிய வைத்தியசாலை பொறுப்புகளை வழங்காமல் “சிக்” லீவு வழங்கிவிட்டு கொழும்பில் சில காய்நகர்த்தல்களை மேற்கொண்டார்.

அங்கு இரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை நாடியதுடன் ஒரு அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சரின் உதவியும் தனது இடமாற்றத்தை தடுப்பதற்காக நாடியுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் மூலம் அறிய கிடைத்தது.

எனினும் மந்திகை வைத்தியசாலையில் இடம்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் வட மாகாண பிரதம உள்ளக கணக்காய்வு அறிக்கையில் பல முறைகேடுகள் ஆதாரத்துடன் வெளிவந்த நிலையில்  குறித்த வைத்தியருக்காக பேசுவதற்கு யாரும் முன் வரவில்லை.

இந்நிலையில் வேறு வழியின்றி வடமாகாண சுகாதார பணிப்பாளர் பணிமனையில் தனது இடமாற்ற கடிதத்தை பெற்ற நிலையில் நாளைய தினம் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் தனது கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *