வயிற்றில் கொக்கேய்ன் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த வௌிநாட்டவர் கைது!

கட்டாரின் டோஹா நகரம் ஊடாக இலங்கைக்கு வந்த 43 வயதுடைய உகாண்டா நபர் ஒருவர் சட்டவிரோதமான முறையில் வயிற்றில் மறைத்து வைத்திருந்த கொக்கேய்ன் போதைப்பொருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

12 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேன் போதைப்பொருளுடன் நாட்டுக்கு வந்த உகண்டா நாட்டு பிரஜையை சுங்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

43 வயதுடைய குறித்த நபர் 17 கொக்கேன் பொதிகளை உடமையில் மறைத்து வைத்திருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்கிடமான முறையில் செயற்பட்ட உகண்டா பிரஜையை தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்திய போது அவர் தனது வயிற்றுப்பகுதியில் போதைப் பொருளை மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

சந்தேகநபர் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளினால் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *