பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கும் காலத்தை வெளியிட்ட மஹிந்த தேசப்பிரிய

கொழும்பு, செப்.29

ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு அடுத்தவருடம் மார்ச் மாதம் 26ஆம் திகதியின் பின்னர் அதிகாரம் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டும் என அதிகாரிகள் அறிவித்தால், கட்டாயம் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்க வேண்டும்.

ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு இன்னும் அதிகாரம் இல்லை. எனினும் பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான யோசனை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டால் அதனை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *