
நினைவேந்தலுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது அடிப்படை மனித உரிமை மீறலாகும் . வடக்கு- கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தமிழ் மக்கள் அமைதியாகவே நடத்துகின்றனர் . அடிப்படை அரசியல் அறிவு அற்றவர்களே இதற்கு எதிராகக் கண்டனங்களை வெளியிடுகின்றனர் .
தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தால் தமிழர்களுக்கான உரிமைகளையும் , தீர்வுகளையும் வழங்கியே தீரும் . -இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார் .
தமிழினத்தால் ‘ தியாக தீபம் ‘ என்று போற்றப்படும் திலீபனை வடக்கு , கிழக்கில் பகிரங்கமாக நினைவேந்தியவர்களை உடனடியாகக் கைதுசெய்து சிறையில் அடைக்கவேண்டுமென்று முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ அரசிடம் வலியுறுத்தியுள்ளார் .
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார் .
அவர் மேலும் தெரிவித்ததாவது :
இலங்கை ஒரு ஜனநாயக நாடு . இங்கு போரிலோ அல்லது வேறு எந்தச்சந்தர்ப்பத்திலோ உயிரிழந்தவர்களை அவர்களின் உறவுகள் அல்லது அவர்களின் இனத்தவர்கள் அமைதியாக நினைவேந்த முடியும் . இதற்கு எதிராக எவரும் கருத்துக்களை வெளியிட முடியாது .
தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமை யைப் பறித்துவிட்டு நாட்டில் எப்படி நல் லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் ? மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரச தரப்பினரும் அதன் நேர்வழி , மறைவழி பங்காளிகளும் இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு தமிழ் மக்களின் மனதைப்புண்படுத்தியே வந்தார்கள் .
தமிழ் மக்களுக்கான உரிமைகளையும் , தீர்வுகளையும் வழங்க எந்த அரசும் முன்வரவில்லை . இந்த நாட்டில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தால் தமிழர்களுக்கான உரிமைகளையும் , தீர்வுகளையும் வழங்கியே தீரும் ” -என்றார் .
பிற செய்திகள்