பிரதமரை சந்தித்து பேசுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!

பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது.

பிரதமர் அலுவலகத்தில் இன்று(வியாழக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

மேலும், பிரதமர் தினேஷ் குணவர்தன விடுத்த கோரிக்கைக்கு அமைய கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமருடனான இந்த கலந்துரையாடலின் போது எதிர்வரும் தேர்தல் மற்றும் அதன் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *