கொக்கேய்னுடன் இலங்கை வந்த உகண்டா பிரஜை கைது!

5 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேய்னுடன் இலங்கை வந்த உகண்டா பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உகண்டாவில் இருந்து இலங்கைக்கு வந்த 43 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சுமார் 80 கொக்கெய்ன் மாத்திரைகளை விழுங்கியுள்ளதுடன், இதுவரை 17 கொக்கெய்ன் மாத்திரைகள் அவரது உடலில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபரும் போதைப்பொருளும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சுங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *