வவுனியா உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை சந்திப்பு!

பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் வவுனியா உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவிடமிருந்து சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வருடகாலமாக உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களை வலுப்படுத்தலும் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் எனும் தொனியில் இடம்பெற்ற பயிற்சிப்பட்டறையின் இறுதி நிகழ்வு நேற்று சப்ரி நிறுவனத்தின் இலங்கைக்கான தலைவி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காகுமாரதூங்கா தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *