யோகா கற்கைநெறி புதிய பிரிவு ஆரம்பம்

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகால் உடல், உள மேம்பாட்டுக்காக  இலவசமாக நடத்தப்பட்டுவரும் யோகக்கலை கற்கைநெறியின் புதிய பிரிவு எதிர்வரும் 8ஆம் திகதி நல்லூர்க் கந்தன் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் ஆரம்பமாகவுள்ளது.

சனி, ஞாயிறு தினங்களிலும் அரச விடுமுறை தினங்களிலும் காலை 6 மணிமுதல் 8மணிவரை நடைபெறும் இந்த வகுப்புகளில் ஆர்வமுள்ள இருபாலாரும் வயது வேறுபாடின்றி கலந்துகொள்ளலாம்.

மூன்று மாத காலங்களைக் கொண்டமைந்த இந்த அடிப்படைக் கற்கைநெறியை பூரணமாக முடிப்பவர்களுக்கு கல்வி அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.

பயிலவிரும்புவோர் வடமாகாண கல்வி அமைச்சிலோ அல்லது அதன் இணையத்தளத்திலோ விண்ணப்பப்படிவங்களைப்பெற்று எதிர்வரும் 05 திகதிக்கு முன்னர் கல்வி அமைச்சு வடமாகாணம், இளைஞர் விவகார அலகு, செம்மணிவீதி, நல்லூர், யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு  தபால் மூலமோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்கலாம் என  அமைச்சின்  செயலாளர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *