யாழில் மரங்களைக் கடத்திய இரண்டு பெண்கள் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணற்காடு சவுக்கங்காட்டில், சவுக்கு மரங்களை வெட்டி கடத்த முற்பட்ட சமயம் ,ஏழு துவிச்சக்கார வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டதாக பருத்தித்துறை பொலிசார் தெரிவித்தனர்.

மணற்காடு சவுக்கங்காட்டில் முழு மரமாக சவுக்கம் மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய விசேட குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய நேற்று வியாழக்கிழமை(29) முற்பகல் காட்டுப் குதியினை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தலமையிலான பொலிசார் சுற்றி வளைத்த போது சவுக்கு மரங்களை முழு மரங்களாக வெட்டி கடத்த முற்பட்ட சமயம் ஏழு துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் அதனை கடத்த முற்பட்ட ஆண்கள் தப்பிச்சென்ற நிலையில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *