இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை மாலை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு இடம்பெற்றது.
இதன்போது, தாயக விடுதலைக்காக உயிர் நீத்த வீரர்களுக்கு சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இவ் நினைவேந்தல் நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு மாவீரர்களை நினைவு கூர்ந்தனர்.


வடக்கு மாகாண செயலருக்கும் ஆளுநருக்கும் தமிழ் தெரியாது! நாடாளுமன்றில் கூட்டமைப்பு சுட்டிக்காட்டு