மாலத்தீவை வீழ்த்திய இலங்கை அணி

கொழும்பு, செப்.30

மாலைதீவில் நடைபெற்ற தெற்காசிய மகளிர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

லீக் சுற்றின் முக்கியமான இறுதிப் போட்டியில் மாலத்தீவை வீழ்த்தி இலங்கை அணி சாம்பியனானது.

ஐந்தாவது தெற்காசிய மகளிர் கூடைப்பந்து போட்டியின் இறுதி போட்டி மாலேயில் நடைபெற்றது. தெற்காசிய பெண்கள் கூடைப்பந்து போட்டியில் 6 அணிகள் பங்கேற்றன.

இதில் இறுதிப் போட்டிக்கு இலங்கை மற்றும் மாலத்தீவுகள் தகுதி பெற்றன. முதல் பாதி முடிவில் இலங்கை அணி 46க்கு 22 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியின் முடிவில் இலங்கையின் கூடைப்பந்தாட்ட வீரர்கள் 72 க்கு 59 புள்ளிகள் என முன்னிலை பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

தெற்காசிய பெண்கள் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இரண்டாவது தடவையாகவும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *