இன்றைய தினம் நாவலரின் 200ஆவது நூற்றாண்டினை முன்னிட்டு அறநெறிப் பாடசாலைகளில் நூலகம் அமைக்கும் திட்டம் யாழில் ஆரம்பமானது.
இந்நிகழ்வின் பின், பிரதமரின் இந்து மத விவகார அலுவலருக்கான இணைப்பாளர் பாபு சர்மா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை பிரதமரின் அறிவுறுத்தலுக்கமைய ஆறுமுக நாவலர் பெருமானின் 200ஆவது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முக்கிய அம்சமாக 192ஆவது குருபூசை தினத்தை முன்னிட்டு நாடுபூராகவும் அறநெறிப் பாடசாலைகளில் 100 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு நூலகம் அமைக்கும் திட்டம் இன்று நாவலர் பிறந்த மண்ணில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் உமா மகேஸ்வரன் ஏற்பாட்டில் பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீதா நாத் காசிலிங்கம், நந்திக்கொடி அகில இலங்கை இந்து மாமன்ற தலைவர் தனபாலா மற்றும் ஏனைய பிரமுகர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
நாவலர் பெருமானின் புரட்சிகரமான சைவ சமயத்துக்கு அவர் ஆற்றிய நன்றி தெரிவிக்கும் முகமாக இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்த வகையில் எமது பிரதமரின் அறிவித்தலின் மூலம் 200 ஆவது நூற்றாண்டு விழாவுக்கு ஒரு அவர் ஞாபகார்த்தமாக முத்திரை வெளியீடு செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை பூராகவும் நாவலரின் 200 ஆவது நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்காக சகல ஏற்பாடுகளையும் இந்து கலாசார திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. நாவலர் பெருமானை போற்றுவோம் சைவத்தை காப்பாற்றுவோம் என்றார்.


ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!