ஒரேநாளில் 75 ஏவுகணைகளை வீசி உக்ரைன் மீது கொடூர தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது ரஷ்யா. இதில் பல கட்டடங்கள் தகர்க்கப்பட்டதுடன் பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் நாடு இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.
உக்ரைனை கைப்பற்றும் நோக்கில் கடந்த 8 மாதத்துக்கும் இந்தப் போர் இடம்பெற்றுவருகின்றது. எனினும் உக்ரைனை எளிதில் கைப்பற்றி விடலாம் என நினைத்த ரஷ்யாவால் உக்ரைனை முழுமையாக கைப்பற்ற முடியவில்லை. இதனால் போர் நீடித்து வருகின்றது.
இந்த நிலையில் உக்ரைனின் முக்கியமான நகரங்களான டினிப்ரோ, ஜபோரிஜியா, க்ரிவி ரிஹ், ஒடேசா உள்ளிட்ட மேலும் பல நகரங்கள் மீது ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
ஒரே நாளில் சுமார் 75 ஏவுகணைகளை வீசி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் உக்ரைன் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில்,
‘‘பூமியில் இருந்து உக்ரைனை நீக்க ரஷ்யா நினைக்கிறது. ரஷ்யாவின் இந்தத் தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். பல இடங்கள் சேதமடைந்துள்ளன– என்றார்.