திடீர் சுகயீனம் காரணமாக 42 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி : வெளியான விபரம்!

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை – பட்டானைத் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சுமார் 42 மாணவர்கள்
இன்று (11.10.2022) திடீர் சுகவீனம் காரணமாக கொட்டகலை வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

6 முதல் 11ம் வகுப்பு வரை பயிலும் 13 மாணவர்களும், 29 மாணவிகளும் மயக்கம்,
காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக
ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில்
சிலர் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஏனையோர் வெளிநோயாளர் பிரிவில்
சிகிச்சை பெற்று வருவதாகவும் மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக
இல்லை எனவும் வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களில் சிலருக்கு நேற்று (10.10.2022) இதே அறிகுறிகள்
காணப்பட்டதாகவும் அவர்கள் நேற்று (10.10.2022) மாலை கொட்டகலை வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்றதாகவும் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *