
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான தனது 15 மகன் தனக்கு வேண்டாம் எனக்கூறி தாய் ஒருவர் எழுத்துமூலம் கடிதம் எழுதிக் கொடுத்து சுன்னாகம் பொலிஸாரிடம் மகனை ஒப்படைத்துள்ளார்.
சிறுவன் நீதிமன்ற உத்தரவுக்கமைய அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் குறித்த மகன் சேர்க்கப்பட்டுள்ளார்.
யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் வசிக்கும் தாயொருவர் தனது போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானமை அறிந்து மகனை தன்னால் பராமரிக்க முடியவில்லை எனக் கூறி தனது கைப்பட கடிதம் எழுதி பொலிஸாரிடம் வழங்கி தனது மகனையும் பொலிஸாரிடம் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் குறித்த சிறுவனை சிறுவர் நீதிமன்றில் முற்படுத்தியபோதே று அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.