நகரசபை உறுப்பினர் வீட்டை உடைத்து கொள்ளை

காத்தான்குடி,ஒக் 11

காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவருமான றஊப் அப்துல் மஜீதின் கடற்கரை வீதியிலுள்ள வீட்டை உடைத்து கொள்ளையிட்ட நபரை காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.எம்.ஏ.றஹீம் தெரிவித்தார்.

குறித்த வீட்டை பூட்டிவிட்டு இரு தினங்களின் பின்னர் மீண்டும் வந்து திறந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவை உடைத்து பெறுமதி மதிக்கமுடியாத வெண்கலத்திலான கழுகு சிலை மற்றும் மின்பிறப்பாகி என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.

குறித்த கொள்ளையிடப்பட்ட பொருட்களை கடையொன்றில விற்பனை செய்யப்பட்ட நிலையில் குறித்த சந்தேக நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஏ.றஹீம் தலைமையில் கருணாரட்ன ஜெயசிங்க சாணக தனோஜன் சந்திரதாச ஆகிய பொலிஸ் குழுவனரே சந்தேக நபரைக் கைது செய்தனர்.

கைதான நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *