யாழ். மாவட்டத்தில் போதைவஸ்து பாவனையை தடுக்கும் முகமாக துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்வு!

யாழ். மாவட்டத்தில் அண்மைக் காலமாக போதைவஸ்து பாவனை அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால் யாழ்ப்பாணத்தின் கலாசாரம் சீரழிந்து கொண்டு செல்கின்றது.

இதன் காரணமாக, இன்று (11) மாலை 5.00 மணி அளவில் யாழ். மாநகரில், போதைப்பொருள் பாவனையில் இருந்து இளைஞர்களை பாதுகாப்பதற்கன தீர்வுகள் மிக விரைவில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு துண்டுப் பிரசுரங்கள் இளைஞர்களுக்கும் பெற்றோருக்கும் விநியோகிக்கப்பட்டன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் வாசுகி சுந்தரத்தினால் இந்த துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *