
கொழும்பு, ஒக் 11
நாட்டின் இருவேறு கடற்பகுதிகளில் இருந்து இரு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அந்த வகையில், கொள்ளுப்பிட்டி கடற்பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலத்தைக் கடற்படையினர் மீட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சடலம் தற்போது வரை அடையாளம் காணப்படாத நிலையில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அத்தோடு மட்டக்குளி கடற்பகுதியிலிருந்து இரு கைகளும் அற்ற நிலையில் ஆணின் சடலம் ஒன்று மட்டக்குளி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சடலத்தின் கைகளை முதலைகள் உட்கொண்டிருக்கலாம் என்றும் அந்த சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.