நாட்டை மீட்கவே ரணில் ஜனாதிபதியானார்- பாலித பெருமிதம்!

நாட்டை மீட்கவே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானார், மாறாக ராஜபக்சக்களை பாதுகாப்பதற்கு அல்ல என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க தற்போது தங்களின் வழிக்கு வந்துவிட்டார் என மஹிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” ஆட்சியாளர்களால் வெளியில் தலைகாட்ட முடியாமல் இருந்தது. அந்நிலைமையை ரணில் விக்கிரமசிங்கவே மாற்றியமைத்தார்.

தவறான வழியில் பயணித்த அரசியல்வாதிகளுக்கே அவரே புனர்வாழ்வளித்தார். மாறாக ராஜபக்சக்களை பாதுகாப்பது அவரின் நோக்கம் அல்ல. எனவே, வாயை மூடிக்கொண்டு பயணிப்பது சிறந்தது.” – எனவும் ரங்கே பண்டார குறிப்பிட்டார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *