தொடரும் கைதுகள்: வவுனியாவில் ஹெரோயினுடன் சிக்கிய இளைஞன்!

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இளைஞன் ஒருவர் ஹெரோயின் தூளினை தனது உடமையில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

இன்று (11) காலை பூந்தோட்டம் கண்ணன்கோட்டம் பகுதியில் மடுகந்த விஷேட அதிரடி படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஹெரோயின் தூள் தனது உடமையில் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில் கைது செய்துள்ளதாகவும் அவரிடமிருந்து 3கிராம் 770மில்லிக்கிராம் ஹெரோயின் தூள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 32 வயதுடைய மகாரம்பைக்குளம் பகுதியை சேர்ந்தவரை கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர்  நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *