
சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதித்தமை தொடர்பில் பொரலஸ்கமுவ பகுதியில் 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பாதித்த பணத்தை பயன்படுத்தி, 65 இலட்சம் ரூபா பெறுமதியான கார் மற்றும் 250 இலட்சம் ரூபா பெறுமதியான ஜீப் ஒன்றை குறித்த இளைஞர் கொள்வனவு செய்துள்ளார்.
இந்த நிலையில் அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் 20 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
மேலும் கைதான சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்