22வது திருத்தம் அமுல்படுத்தப்படும்! – அமைச்சர் நம்பிக்கை

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதால் அமைச்சர்கள் அதற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் (11) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த திருத்தம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்கள் விரும்பும் வகையில் வாக்களிப்பதற்கு சுதந்திரம் உள்ளதாகவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் எதிர்பார்க்கும் வகையில் அரசியலமைப்பின் 22வது திருத்தம் அமுல்படுத்தப்படும் என நம்புவதாகவும் இந்த திருத்தும் தொடர்பாக ஒரே தரப்பிற்குள்ளேயே பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *