சரித ஹேரத் தலைவராக இருந்த காலத்தில் வெளிப்பட்ட ஊழல் குறித்து விரைவில் விளக்கமளிக்கப்படும் – கோப் குழுவின் புதிய தலைவர்

<!–

சரித ஹேரத் தலைவராக இருந்த காலத்தில் வெளிப்பட்ட ஊழல் குறித்து விரைவில் விளக்கமளிக்கப்படும் – கோப் குழுவின் புதிய தலைவர் – Athavan News

நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் கோப் குழுவின் தலைவராக இருந்த காலத்தில் வெளிப்பட்ட ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் விளக்கமளிக்கப்படும் என கோப் குழுவின் புதிய தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கோப் குழுவின் அதிகாரங்கள் மேலும் விரிவாக்கப்படும் என்றும் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் சட்ட கட்டமைப்பின் ஊடாக, கோப் குழுவின் பரிந்துரைகள் சட்டமா அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *