நாட்டின் சில பகுதிகளில் 75 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைபெய்யக்கூடும்!

மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைபெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது ஏற்படக்கூடிய மின்னல் தாக்கம் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படும் அனர்த்தங்கள் குறித்து தேவையான பாதுகாப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *