
ரயில்வே திணைக்களம் கடந்த ஆண்டில் 15,188 ரயில் பயணங்களை ரத்து செய்துள்ளது. 2021 ஆம் ஆண்டுக்காக ரயில்வே திணைக்களம் தொடர்பாக வெளியிடப்பட்ட வருடாந்திர கணக்காய்வு அறிக்கையின்படி இது 18 சதவீதமாகும்.
கடந்த ஆண்டு 84,244 ரயில்களை இயக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டிருந்தது.
ஆனால் அந்த ஆண்டில் 69,036 ரயில்களை மட்டுமே இயக்க முடிந்தது என்று கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பல கோரிக்கைகளின் அடிப்படையில், ஆரம்ப தொழில்முறை நடவடிக்கையின்படி 2021 டிசம்பர் 24 முதல் 28 வரை ரயில் டிக்கெட்டுகளை வழங்க வேண்டாம் என்று ரயில் நிலைய அதிபர்கள் முடிவு செய்தனர்.
டிக்கெட் வழங்குவதில்லை என்ற முடிவால், இந்த 5 நாட்களில் அரசாங்கம் 24,381,943 ரூபா வருமானத்தை இழந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.
தொழிற்சங்கங்களில் இருந்து இழந்த வருமானத்தை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.
பிற செய்திகள்