
திருமலை, ஓக.12
திருகோணமலையில் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்களின் இருப்பையும் பாரம்பரியங்களையும் பாதுகாக்கும் வகையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழர் பேரவை என்ற அமைப்பின் முக்கியஸ்தர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சந்தித்து கலந்துரையாடினர்.
இந்தக் கலந்துரையாடலின் போது தமது அமைப்பின் நோக்கம் தொடர்பாக தெளிவுபடுத்தியதுடன் எதிர்பார்ப்புகள் தொடர்பாகவும் அமைச்சரிடம் கோரிக்கைகளை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.