
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டில் உள்ள அலவ்வ பிரதேச சபையின் அடுத்தாண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற பாதீட்டு வாக்கெடுப்பின் போது, 9 மேலதிக வாக்குகளால் அது தோற்கடிக்கப்பட்டது.
28 உறுப்பினர்களைக் கொண்ட அலவ்வ பிரதேச சபையில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 15 உறுப்பினர்கள் உள்ளனர்.
எனினும் நேற்றைய வாக்கெடுப்பின் போது 18 உறுப்பினர்கள் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தனர்.
எதிராக வாக்களித்தவர்களில் 9 பேர் சிறிலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்களாவர்.
பிற செய்திகள்