
கடந்த மே மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் மஹிந்த பிரதமர் பதவியிலிருந்து விலகியிருந்தால் நாட்டில் வன்முறை தோற்றம் பெற்றிருக்காது என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரி வித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
மே 9 ஆம் திகதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டுக்கொண்டு அலரிமாளிகையில் ஒன்று கூடியவர்கள் காலிமுகத்திடல் போராட்ட களத்துக்குள் புகுந்து தாக்குதலை நடத்தினர்.
அதனால் நாடு முழுவதும் கலவர பூமியாகியது. அதன் பின்னரே மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.
எனினும் மே 9ஆம் திகதி காலை அல்லது அதற்கு முன்னர் மஹிந்த பதவி விலகியிருந்தால் எந்தப் பிரச்சினையும் நாட்டில் தோற்றம் பெற்றிருக்காது.
மஹிந்த ராஜபக்சவை மே 9 இல் தவறாக வழி நடத்தியவர்கள் தற்போது மீண்டும் அவரை மேடைக்கு ஏற்றி நாட்டு மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றார்கள். களுத்துறையில் இருந்து அதற்கான பயணத்தை தற்போது ஆரம்பித்துள்ளனர்- என்றார்.