மோதர காஜிமாவத்தை தீ விபத்து: பிரதமரிடம் அறிக்கை கையளிப்பு

கொழும்பு – மோதர காஜிமாவத்தை தீ விபத்து தொடர்பில் ஆராய்ந்த குழுவின் அறிக்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசாங்கம் மேலதிக நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணத்தை ஆராய்வதற்கும், வீடுகளை இழந்தவர்ளுக்கு நிவாரணம் வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்த குழு அண்மையில் பிரதமரால் நியமிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீப் உடுகொட, கொழும்பு மாவட்டச் செயலாளர் பிரதீப் யசரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *