பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய பாராளுமன்ற தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. உள்ளுராட்சி சபைகளை பெப்ரவரி மாதம் கலைக்கப்படுகின்ற சூழ்நிலை வந்திருக்கிறது. இந்நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்படாது,புதிய தேர்தல் நடாத்தப்படாது என்றதுடன் உள்ளுராட்சி சபையுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் தேர்தல் உடனடியாக நடத்தப்படுமா ? என்ற கேள்வி எழுந்திருக்கிறது என முன்னாள் நாடாளுமகன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச் சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
உள்ளுராட்சி தேர்தல் என்பது கடந்த காலங்களில் வட்டார ரீதியாகவும் ,தொகுதிப் பட்டியல் என்ற அடிப்படையிலும் இரண்டு விதமான தேர்தலும் நடைபெற்றிருந்தது .இதனை மாற்றி மீளவும் ஒரு வட்டார முறையினை கொண்டு வர வேண்டும்.
தற்போது 8 ஆயிரத்துக்கு மேலான உள்ளுராட்சி உறுப்பினர்கள் முழு இலங்கையிலும் இருக்கிறார்கள்.இது 4 ஆயிரமாக குறைக்கப்பட வேண்டும்.என்ற விடயத்தை ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.
அதுமட்டுமன்றி கடந்த 4 வருடங்களாக மாகாண சபை தேர்தல் நடாத்தப்படவில்லை .வட ,கிழக்கு மாகாணங்களில் மாகாண சபை தேர்தல் நடாத்தினால் தான் அவர்களால் அபிவிருத்தி நடவடிக்கைகளை உருப்படியாக செய்யக்கூடிய சூழ்நிலை இருக்கிறது.
இந்த மாகாண சபை தேர்தலுக்கும் புதிய தொகுதிகளை அதற்காக வகுத்து செய்ய வேண்டும் என்ற கருத்தும் இருக்கிறது. பாராளுமன்றம் ,,உள்ளுராட்சி ,மாகாண சபை ஆகிய 3 தேர்தல்களிலும் திருத்தங்களை கொண்டு வர வேண்டும்.
மக்களுக்குரிய ஜனநாயகம் முற்று முழுதாக மறுக்கப்பட்டு இருக்கிறது.கடந்த 4 வருடங்களாக மாகாண சபை தேர்தல் நடாத்தப்படுவதற்கான எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.அதே போன்று தற்போது உள்ளுராட்சி சபை தேர்தலுக்கும் அதே நிலைப்பாடு தான் வர இருக்கிறது.
இவ்வாறான வடிவத்தில் தான் இலங்கையின் ஜனநாயகம் சென்றுகொண்டிருக்கிறது.
ரணில் விக்கிரமசிங்க பொதுஜன முன்னணி கட்சியின் துணையுடன் இவை எல்லாவற்றையும் ஒத்திவைப்பதற்கான வேலைகளைத் தான் இப்பொழுது ஆரம்பித்திருக்கிறார்கள என்பதனை பார்க்கக்கூடியதாக உள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நஸ்ட ஈட்டினை 2 இலட்சமாக அதிகரிப்பது என்ற விடயம் காணப்படுகிறது .இது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை ஏமாற்றுகின்ற செயற்பாடாக உள்ளது.பணவீக்கம் அதிகரித்துள்ளது,நம் நாட்டின் பணத்தின் பெறுமதி குறைந்துள்ளது.
2 இலட்ச பணம் என்பதை பெருந்தொகை பணம் என காட்ட முயற்சிக்கிறார்கள்.சர்வதேச தராதரத்திற்கு இணங்கவே நஸ்ட ஈடு வழங்கப்பட வேண்டுமே தவிர அரசாங்கம் தங்கள் விதித்தது போல் காட்டுவது என்ற விடயம் ஏற்புடையது அற்ற விடயமாக காணப்படுகிறது.
இந்த நஸ்ட ஈடு நடவடிக்கை சர்வதேச ரீதியாக ஆராயப்பட்டு அதன் பிரகாரம் வழங்கப்பட வேண்டும்.
அம்மக்களின் கோரிக்கை இன்னும் கண்டுகொள்ளப்படவில்லை.ஜெனிவா தீர்மானத்தின் பொழுது நாங்கள் உள்ளக பொறிமுறை ஒன்றினை உருவாக்குவோம் என்று கூறியிருந்தார்கள்.
ஆனால் உண்மை என்னவெனில் இவர்கள் உள்ளக பொறிமுறை இல்லை ,வெளியக பொறிமுறை இல்லை ,காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக இவ்ரகள் எந்தவிதமான முடிவையும் திட்டவட்டமாக,சட்ட பூர்வகமாக சொல்லக்கூடிய நிலையில் இந்த அரசாங்கம் இல்லை.
ஏனெனில் இவர்களிடம் சருணாகதி அடைந்தவர்களும் ,இவர்களால் கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே கொல்லப்பட்டிருக்கலாம் என நாம் எல்லோரும் நம்புகிறோம்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்று சர்வதேச ரீதியானபொறி முறை வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது,இதற்கு தெளிவான தீர்வு கூறப்பட்ட தன் பின்பு அரசாங்கம் நஸ்ட ஈட்டினை வழங்கட்டும்.ஜெனிவா தீர்மானத்தின் அடிப்படையில் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் அது உண்மை இல்லை .இந்த ஜெனிவா இலங்கை அரசாங்கத்தினை கட்டுப்படுத்தாது.எங்களுக்கு சாதகமான தீர்வுகளைக் கொண்டு வருவதற்கான சாத்தியம் இல்லை.சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தின் ஊடாக இந்த பிரச்சனைகள் கையாளப்பட வேண்டும்.
ஜெனிவா மனித ஆணையகம் என்பது தமிழ் மக்களுடைய பிரச்சனைகளை சர்வதேச சமூகத்துக்கு சொல்வதற்கான ஒரு களமாக நாங்கள் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர தமிழ் மக்கள் பிரச்ச்சனைக்ளுக்கான மாற்று வழிகளை அனைவரும் சிந்தித்து அவ்வாறான விடயங்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும் .
எதிர்க்கடசிகளை பொறுத்த வரையில் தேர்தல்கள் நடத்த வேண்டும். இல்லையென்றால் தங்கள் சடடப்பூர்வமான நடவடிக்கைகள் எடுப்போம் என்றும் கூறுகிறார்கள்
ஆனால் இப்பொழுது பொதுஜன பெரமுன என்பது பெரும்பான்மை ஆசனங்களை கொண்ட கட்சியாக இருக்கிறது.
அவ்வாறான சூழ்நிலையில் அவர்கள் விரும்பியவாறு சட்டங்களை திருத்துவதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கின்றன.
ஆனால் மாகாண சபைகள் புதிய தொகுதிகளை தெரிவு செய்வது என்பது முஸ்லிம் மலையக மக்களுக்காக மிகப் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது என்று ஒரு பிரச்சினை இருக்கிறது
அதே போல தொகுதிவாரியான பாராளுமன்ற தேர்தல் என்று வருகின்ற போது மலையக மக்கள் முஸ்லிம் மக்களுக்கு பல்வேறுபட்ட பாதிப்புக்கள் ஏற்படும் என்று அவர்களால் சொல்லப்பட்டு வருகின்றது.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் ஏற்கனவே மிக நீண்ட காலமாக இழுபறியில் இருக்கின்ற பிரச்சினைகள் இவருடைய கால கட்டிடத்தில் தீர்க்கப்படுமா என்று ஒரு பாரிய கேள்வி இருக்கின்றது.
ஆனால் அடுத்த இரண்டு வருஷங்களுக்கு தேர்தலை வைக்கக்கூடாது வைக்க முடியாது என்பது அவருடைய நிலைப்பாடு ஆகவே இந்த அரண்டு வருடங்களை கடத்தக்கூடிய வகையிலான மாற்று திட்டங்களை சட்ட மூலங்களை உருவாக்கலாம் என்று கருதுகின்றேன் .
போதைப்பொருள் விடயங்கள் உண்மையாகவே நாங்கள் முழு நாட்டிலும் போதைப்பொருள் என்பது ஒரு பிரச்சனையாக இருந்தாலும் கூட வடக்கு மாகாணத்திற்குள் எப்போது பல பக்கங்களால் போதைப்பொருள்கள் மிக பெருமளவில் வந்து கொண்டிருக்கின்றன.
கேரளா கஞ்சா என்பது பிடிபடாமல் போவது பல மடங்காக இருக்கிறது என்பது மக்களது குற்றச்சாட்டு பல பல இளைஞர்கள் யுவதிகள் கூட போதை வஸ்து பழக்கங்களுக்கு அடிமை ஆகின்ற நிலையை காணக்கூடியதாக இருக்கின்றது.பல கிராமங்கள் போதைவஸ்துக்கு அடிமையான கிராமங்களாகவும் மாறி வருகின்றது
கொழும்பு மற்றும் பகுதிகளிலிருந்து ஹெரோயின் போன்ற ஏனைய மிக மோசமான போதை வஸ்துக்களும் வடக்கு மாகாணத்தில் மிகத் தாராளமாக கொண்டு வரப்படுகின்றது.பல இளைஞர்கள் யுவதிகள் கூட போதைவஸ்து பழக்கங்கள் இருக்கு அடிமை என்ற நிலையை காணக்கூடியதாக இருக்கின்றது
கொழும்பு மற்றும் பகுதிகளிலிருந்து ஹெரோயின் போன்ற இனிய மிக மோசமான போதை வஸ்துக்களும் வடக்கு மாகாணத்தில் மிகத் தாராளமாக கொண்டு வரப்படுகின்றது.ஆகவே இவ்வளவு மிகப்பெரிய முப்படையினர் கடற்படையினர் விமானப்படையினர் இருந்தும் போதைப்பொருள் பாவனை இவ்வளவு தூரம் உருவாவதற்கான காரணம் என்ன?
மாணவர்கள் மத்தியில் இளைஞர்கள் மத்தியில் குறித்த இந்த போதை பொருள் பாவனை வியாபாரம் நடைபெறுகின்றது .இவ்வளவு மோசமான நிலையில் போதைப்பொருள் பாவனை நடைபெறுகின்றது என்றால் அதனை கட்டுப்படுத்த முடியாமல் போவதற்கான மிகப் பிரதானமான காரணம் என்ன
அடுத்ததாக போதைப்பொருள் பாவனையால் கைது செய்யப்படுபவர்களுக்கு நீதிமன்றத்தில் என்ன வகையான தண்டனை கொடுக்கப்படுகின்றது என்பது தொடர்பான விடயம்
இவர்களது வழக்கு விசாரணைகள் எவ்வாறு நடைபெறுகின்றது?இலங்கையில் போதைப்பொருள் பாவனையில் கைது செய்யப்படுபவர்களுக்கு மரணதண்டனை உட்பட வகைகள் அனைத்தும் இருக்கின்றது இத்தகைய தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன இல்லையா என்ற கேள்வி எழுகின்றது .
ஏனென்றால் இதனால் கைது செய்யப்படுபவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள் வருகின்றார்கள் என்பது மக்கள் நிச்சயமாக அறிந்து கொள்ளவேண்டிய ஒரு விடயம்
இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டால் தான் ஏனையவர்கள்இதனை பார்த்து அச்சமடைய கூடிய ஒரு நிலை தோன்றும்.நாளாந்தம் இவர்கள் கொண்டு வரப்படுகின்ற படகுகள் கைது செய்யப்படுகின்றதா? போன்ற கேள்விகள் அனைவர் மத்தியிலும் எழுகின்றது
ஆகவே இது முற்று முழுதாக கட்டுப்படுத்தப்பட வேண்டும். இப்போது தமிழகத்தில் கூட இதற்கான பாரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது. இதற்காக பிரத்யேக கூட்டங்கள் தமிழக முதலமைச்சர்களால் கூட்டப்பட்டு வருகின்றது.
ஆகவே வடக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் போலீஸ் அதிகாரிகள், முப்படை அதிகாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிச்சயமாக இவற்றை நிறுத்துவதற்கு ஒரு காத்திரமான, கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.இவ்வாறு எடுப்பதன் மூலம் அதை கட்டுப்படுத்த முடியும் என்று கருதுகின்றேன் என்றார்.
பிற செய்திகள்