வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது!

கம்பர்மலையைச் சேர்ந்த 25 வயதுடைய முதன்மை சந்தேக நபர் ஒருவரும் அவருக்கு உடந்தையாக செயற்பட்ட  உடுப்பிட்டியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்களிடமிருந்து 11 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் உருக்கப்பட்ட தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வல்வெட்டித்துறை பகுதியில் தொடர்ச்சியாக வீடுகள்  உடைத்து நகைகள் திருடப்பட்டதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

பருத்தித்துறை நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில்  திருடப்பட்ட நகைகள் உருக்கிய நிலையில கைப்பற்றப்பட்டதுடன் நகைக்கடை உரிமையாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில் முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் திருட்டு நகைகளை வங்கியில் அடகு வைக்க உடந்தையாக இருந்த மற்றொருவரும் கைது செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *