தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவுக்கு ஆதரவாகப் பேசியதற்காக தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக வேடுவர்களின் தலைவர் உருவரிகே வன்னிலத்தோ தெரிவித்துள்ளார்.
தனக்கு அநாமதேய கடிதம் மூலம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் கடிதம் குருநாகல் நகரிலிருந்து தனக்கு தபாலில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தம்பன, கொடபாகினிய கிராமத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முதலிகே எங்களுடைய சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் அவர்க ளுக்காகப் பேச எனக்கு உரிமை இருக்கிறது.வசந்த முதலி நல் லவர் என்று நான் சொல்லவில் லை.
ஆனால் அவர் தவறு செய்திருந்தால் அதற்குரிய தண்ட னையை வழங்குங்கள். நாட்டின் சட்டப்படி தண்டிக்க வேண்டும்.
ஆனால் தவறு செய்யவில்லை என்றால், ஒரு மாதம், மூன்று மாதங்கள் வைத்திருந்தாலும், தவறு செய்யவில்லை என்றால் அவரை காவலில் வைப்பதில் அர்த்தமில்லை.
வசந்த முதலிகே தனது தனிப் பட்ட பிரச்சினைகளுக்கு எதி ராக குரல் கொடுக்காமல் முழு நாட்டிலும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். அவர்கள் ஏதேனும் அநீதியை எதிர் கொண்டால் அவர்களுக்காக பேசுவதற்கு அவர்களின் தலைவராக எனக்கு உரிமை உண்டு.
அவர்களுக்காக பேசியதற்காக நான் கொலை மிரட்டல்களை சந்திக்க நேர்ந்தது. என்னை மிரட்டும் பெயர் தெரியாத கடிதம் கூட வந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.