
மியன்மாருக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவானது 73 ஆண்டுகளாக தொடர்கின்றது.
இந்நிறைவை முன்னிட்டு மியன்மார் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளது.
இதற்கமைய, மியன்மார் அரசாங்கத்திடம் இருந்து 1,000 மெட்ரிக் தொன் அரிசி இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான மியன்மார் தூதுவர் யு ஹான் து, வர்த்தக அமைச்சின் செயலாளர் எஸ்.டி.கொடிகார உட்பட பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.