நாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இனவாதத்தினை தூண்டுவதற்கு ஊடகங்கள் துணைபோகிறது – மௌலவி தெரிவிப்பு

சமூக ரீதியான கட்டமைப்பிலே நாட்டிலே இனமுறுகல் எற்படகூடிய கட்டமைப்புக்கள் உருவாகியிருக்கின்றன. அதற்காக பணியில் சில ஊடகங்கள் துணை நிற்கின்றன என யாழ். மக்கள் பணிமனையின் நேசக்கரங்களின் அமைப்பின் தலைவர் மௌலவி எம்.எச்.எஸ்.சுபியான் தெரிவித்தார்.

யாழ். மக்கள் பணிமனையின் நேசக்கரங்களின் அமைப்பின் எற்பாட்டில் உலக முஹம்மது நபியின் மார்க்கத்தின் தன்மையும் அதன் ஊடான வெளிப்படையான உண்மையான கட்டமைப்புக்களும் என்று தலைப்பிலான ஊடகவியாளர்களுக்கு தெளிவூட்டும் கலந்துறையாடல் நேற்று மாலை முஸ்லிம் கல்லூரி வீதியில் அமைந்துள்ள அரபுக்கல்லூரி மண்டவத்தில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்:

இலங்கையிலே இஸ்லாமியர்களுக்கு எதிராக இனவாதத்தினை தூண்டும்வகையில் சில ஊடகங்கள் துணைபோனது. அதில் உள்ள ஊடகவியாளர்கள் தமது தொழில் நிர்ப்பந்தம் அதனை செய்தார்களா?என்பது எமக்கு தெரியாத ஒன்றாக மாறியுள்ளது. ஆகையில் உண்மை தெரியாமல் தான் செய்தார்கள் என்பது தான் உண்மை.

தேவையற்ற ரீதியாக சமூக ரீதியாக பிரச்சனைகளை உருவாக்ககூடிய வகையில் பல பல்லினவாழ்ந்து கொண்டு யிருக்கும் சமூக ரீதியான கட்டமைப்பிலே நாட்டிலே இனமுறுகல் எற்படகூடிய கட்டமைப்புக்கள் உருவாகியிருக்கின்றன. அதற்காக பணியில் ஊடகம் பாரிய பணியில் ஈடுப்பட்டுயிருந்தது என்பதை தற்போதைய காலத்திலும் அதனையும் பார்க்கின்றோம் என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *