சிவனை தூக்கி புத்தரை வைப்பது தான் தொல்பொருள் திணைக்களத்தின் வேலையா?-குமரகுருபரன் கேள்வி

இந்துக்களின் அடையாளங்களை அழித்து புத்த பாகவனை அமர்துவது தொல் பொருள் ஆய்வகத்தின் வேலை அல்ல அது தமிழ் இந்துகளை அவமான படுத்தும் செயலாகும் என சனநாயக மக்கள் காங்கிரசின் பிரதி தலைவர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பூர்விக தமிழ் இந்து அடையாளங்கள், வரலாற்று மரபுகள், புராதன வரலாற்று சின்னங்களை அழித்து அந்த இடத்தில் புத்த பாகவனை அமர்த்துவது இந்துக்களையும்
புத்தபகவனையும் அவமானப் படுத்தும் செயல் என்றுதான் நான் கருதுகிறேன்
இதனை தொல்பொருள், ஆய்வு திணைகளம் உடன் நிறுத்தவேண்டும்.

தமிழ் பெளதர்கள் கந்தரோடையில் வாழ்ந்த பூமி இது அந்த அடையாளங்கள் சிங்களவர்களுக்குரியது என்று திரிவு படுத்தி தமிழ் இந்து பூர்விக அடையாளங்களை அழிப்பது ஏற்று கொள்ள முடியாது.

கிண்ணியாவில் இருக்கின்ற கன்னியா ஊற்று, குருந்தூர் மலை எல்லாம் பெளதர்களுக்குரியது என்றால் தமிழ் இந்துக்களுடைய அடையாளம் தான் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.

திருக்கோணேஸ்வர ஆலயத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தரின் கடமையாகும். இவர் வெறுமணமே பாராளுமன்றதிலோ அல்லது ஊடகத்திலோ அறிக்கை விடுவதில் எந்த பலனும் இல்லை எனவே சகலரும் சமத்துவத்துடன் வாழ்வதே சிறந்ததாகும் தமிழ் இந்து அடையாளங்கள் அழிக்கப்படும் போது அதனை வேடிக்கை பார்க்க மாட்டோம் என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *