தீராப் பிரச்சினைகளுக்கு காரணம் தமிழ் பிரதிநிதிகளே – டக்ளஸ் சாடல்

மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் தீராமல் இருப்பதற்கு தமிழ் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுகின்ற நபர்களே காரணம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கன்னியா இராவணேஸ்வர் வித்தியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:

மக்களின் பிரச்சினைகளை தீரா பிரச்சினைகளாக வைத்திருப்பதே தமிழ்த் தேசியம் என்று சொல்லிக்கொண்டு திரியும் அரசியல்வாதிகளின் எண்ணம்.மக்களின் தற்போதைய பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றோம்.பேசிக்கொண்டு கொண்டிருந்தால்,எதிர்கொண்டு இருந்தால் ஒன்றுமே நடைபெறாது.ஆனால் மக்களுக்கான வழி வகைகளை செய்ய எத்தனிக்கின்றோம் என்றார்.

மேலும் தமிழர்களின் கலாசார நடனங்களில் ஒன்றான கும்மி நடன வரவேற்போடு அழைத்து வரப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கன்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தினை திறந்து வைத்தார்

இதனிடையே திருகோணமலை சாம்பல் தீவு களப்பு பிரதேசத்தினை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த களப்பு பிரதேசத்தினை கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், வனவள ஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து முகாமைத்துவம் செய்து களப்பினை பாதுகாப்பதற்கான சாதக பாதகங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆராய்ந்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *