அபிவிருத்தி லெத்தர் சபையினால் பத்து இலட்சம் ரூபா வெற்றி பெற்ற வெற்றியாளருக்கான பணம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

வெற்றியாளருக்கான பணம் வழங்கும் நிகழ்வு இன்று (12.10.2022) முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வெற்றியாளர்களுக்கான பரிசு தொகைகளை மாவட்டங்களுக்கு சென்று விற்பனை முகவர்கள் ஊடாக வழங்கும் நடவடிக்கை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி லொத்தர் சபையின் முல்லைத்தீவு மாவட்ட முகாமையாளர் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற காசோலை வழங்கும் நிகழ்வில், அபிவிருத்தி தலைவர் அஜித்குணரத்ன நாரகல, புதுக்குடியிருப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகரி எம்.பி.ஆர்.கேரத் மற்றும் அபிவிருத்தி லெத்தர் சபையின் விற்பனை பகுதி உதவிப்பொது முகாமையாளர் சுனிஜெரத்தின உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு காசோலையினை வழங்கி வைத்தனர் . இதன்போது விற்பனை முகவருர்களுக்கான காசோலைகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்