வெளிநாட்டில் வேலை வாங்கித் தருகின்றோம் என ஏமாற்றும் கும்பல் – மக்களே அவதானம்

சுற்றுலா விசாவில் மலேசியாவில் வேலைக்காக செல்ல வேண்டாம் என இலங்கை வேலைவாய்ப்பு பணியகம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் சுற்றுலா விசாவில் மலேசியாவிற்கு பணிக்கு அனுப்பப்படும் மோசடி செய்பவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு தெரிவிக்குமாறு பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ,வேலை தேடுபவர்களிடம் இருந்து பல்வேறு நபர்கள் பணம் பறிப்பதாகவும், சுற்றுலா விசாவில் மலேசியாவுக்கு வேலைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறான மோசடிகள் தொடர்பில் உங்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு 0112864241 அல்லது தொலைநகல் இலக்கம் 0112864118 அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது தகவல்களை அனுப்புமாறு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *