
அரசாங்கத்தின் அண்மைய வரித் திருத்தம் பின்னடைவைச் சந்திக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா எச்சரித்துள்ளார்.
இந்த வரி அதிகரிப்பு முன்மொழிவு நாடாளுமன்றத்திலோ அல்லது நாடாளுமன்ற நிதிக் குழுவிலோ ஒப்புதலுக்காக முன்வைக்கப்படவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர், சர்வதேச நாணய நிதியத்துடன் இணங்கிக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நகர்வுகளில் ஒன்று வரி திருத்தம் என்றும், அது, பொதுமக்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.
இந்த உத்தேச சர்வாதிகார வரித் திருத்தங்கள் இன்னும் விவாதிக்கப்பட வேண்டும், அத்துடன் படிப்படியாக படிப்படியாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்த வரி திருத்தங்கள் பொதுமக்களுடன் கலந்தாலோசிக்காமல் செயல்படுத்தப்பட்டால், அது பின்னடைவை சந்திப்பது மாத்திரமல்லாமல், பேரழிவு சூழ்நிலைகளை ஏற்படுத்தும் என்று ஹர்ச சில்வா எச்சரித்தார்.
சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து பில்லியன் கணக்கான டொலர்கள் மூலம் நிதியுதவி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட போதிலும், அது எதுவும் கிடைக்கப்பெறவில்லை,
எனவே, சர்வதேச சந்தையின் கதவுகள் இலங்கைக்கு மூடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
உலக வங்கி, ஆசிய வங்கி மற்றும் ஐரிஸ் வங்கி ஆகியவற்றின் கதவுகளும் இலங்கைக்கு மூடப்பட்டுள்ளன என்றும் ஹர்ச டி சில்வா தெரிவித்தார்.
எதிர்வரும், டிசம்பர் மாதத்திற்குள் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி தெரிவித்த போதிலும் அது நடப்பதாகத் தெரியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த வசதிகளை நிறைவேற்றுவதற்கான கொள்கைகளாக அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார நல்லாட்சி என்பவற்றை நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை ஹர்ச டி சில்வா வலியுறுத்தினார்.
பிற செய்திகள்