திடீர் மாரடைப்பால் எம்.பி. வைத்தியசாலையில் அனுமதி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோகதாரலிங்கம் நேற்று மாரடைப்பு காரணமாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாரடைப்பு காரணமாக நேற்று புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையில் இருந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரியவருகின்றது.

தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *