இலங்கையில் கண்டறியப்படும் கொரோனா தொற்றாளர்கள்! வெளியான முக்கிய தகவல்

இலங்கையில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

எனினும் கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

பொது மக்களில் பதினாறு மில்லியன் பேர் முதன்மை நோய்த் தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொண்டனர்.

பதினான்கு மில்லியன் மக்கள் இரண்டாவது நோய்த்தடுப்பு செயல்முறைகளை நிறைவுசெய்துள்ளனர். மூன்றாவது நோய்த்தடுப்பு மருந்துகளை எட்டு மில்லியன் மக்கள் பெற்றுள்ளனர்.

இந்தநிலையில் சமூகத்தில் நியாயமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. எனவே, சமூகத்தில் வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. சமூகத்தில் தற்போதைய நோய்த்தடுப்பு வீதத்தை தொடர்ந்தால், வைரஸ் தொடர்ந்து கட்டுக்குள் இருக்கும்.

நாள்தோறும் பதிவாகும் கொரோனா எண்ணிக்கை குறைந்துள்ளது, ஆனால் அது அதிகரிக்கக்கூடும். சுகாதார வழிகாட்டுதல்களை தொடர்ந்து கடைப்பிடித்தால், இது நிர்வகிக்கக்கூடிய அளவில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸ் நாட்டிலிருந்து முற்றிலுமாக அகற்றப்படுவதை காண விரும்பினால், மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு பூஜ்ஜியம் சதவீதம் கொரோனா பதிவாகும் வரை காத்திருக்கவேண்டும் என்றும் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *