இலங்கையில் தொடருந்து பயணிகளின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை!

இலங்கையில் தொடருந்து பயணிகளின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்கீழ் தொடரூந்தின் பாதுகாப்பைப் பேணுவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்கள், தொடரூந்து பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் அனுமதிச்சீட்டு பரிசோதகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தொடரூந்து பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

குறுகிய தூர தொடரூந்துகள், சீரற்ற முறையில் சோதனை செய்யப்படும்.

அதே நேரத்தில் நீண்ட தூர தொடரூந்துகளுக்கு பாதுகாப்புப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

தொடரூந்து பெட்டிகளுக்குள் திருட்டுச் சம்பவங்கள் நடப்பதாக முறைப்பாடு எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடரூந்து பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்கு இலங்கை பொது பாதுகாப்புப் படையும் உதவவிருக்கிறது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *