கரையோர மார்க்க ரயில் சேவை நேர அட்டவணை திருத்தம் பிற்போடப்பட்டது

கொழும்பு, ஓக.13

இன்று முதல் கரையோர மார்க்க ரயில் சேவையின் நேர அட்டவணையில் ஏற்படுத்தவிருந்த திருத்தம் பிற்போடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த ரயில் மார்க்கத்தில் பயணிக்கும் சில ரயில்கள் 10 நிமிடங்களுக்கு முன்னதாகவோ அல்லது உரிய நேரத்திற்கு முன்னரோ பயணத்தை ஆரம்பிக்கும் என ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று தெரிவித்தது.

பெரும்பாலும் இது அலுவலக ரயில்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில், குறித்த ரயில் நிலையங்களின் ஊடாக பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், குறித்த தீர்மானம் தொடர்பில் ரயில் கட்டுப்பாட்டு மையத்திற்கோ அல்லது தொடர்பாடல் பிரிவுக்கோ நேற்று பிற்பகல் வரையில் உரிய வகையில் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.

இந்தநிலையில், இன்று முதல் கரையோர மார்க்க ரயில் சேவையின் நேர அட்டவணையில் ஏற்படுத்தவிருந்த திருத்தம் பிற்போடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *