புத்த பெருமானின் பிறப்பிடத்திற்கு வருகை தரும் இலங்கை யாத்ரீகர்களின் வசதிக்காக கொழும்புக்கும் நேபாளத்தின் லும்பினிக்கும் இடையே நேரடி விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் இன்று கலந்துரையாடப்பட்டது.
இது தொடர்பான கலந்துரையாடல் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிற்கும் நேபாள தூதுவர் பாஷு தேவ் மிஸ்ராவிற்கும் இடையில் அமைச்சில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின் போது, கொழும்பு மற்றும் நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுக்கு இடையில் ஏற்கனவே செயற்படும் விமானங்களை லும்பினி வரை நீடிக்குமாறு தூதுவர் கோரிக்கை விடுத்தார்.

உத்தேச விமான சேவைகளை நீடிப்பது இலங்கை யாத்திரிகர்களுக்கு பெரும் வசதியாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான நேபாளிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவதாகவும், கொழும்பில் இருந்து லும்பினி வரை நீடிக்கப்பட்ட மார்க்கமானது இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்புறவையும் இருதரப்பு உறவுகளையும் மேலும் வலுப்படுத்தும் என தூதுவர் தெரிவித்துள்ளார்.
பிறசெய்திகள்