தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரிசியை விடுவிக்க நடவடிக்கை!

பல்வேறு காரணிகளால் சுங்கத்தினால் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கொள்கலன்களில் உள்ள ஒரு மில்லியன் கிலோ கிராம் அரிசியை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

தாமதக் கட்டணம் செலுத்தப்படாமை காரணமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 79 கொள்கலன்களில் இந்த அரிசி தொகை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

துறைமுகம் மற்றும் சுங்கப்பிரிவின் அதிகாரிகளுடன் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

அண்மையில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கொழும்பு துறைமுகத்தில் உள்ள இலங்கை சுங்கத்தில் கண்காணிப்பினை முன்னெடுத்திருந்த நிலையில், அது குறித்த விடயங்கள் நேற்றைய கலந்துரையாடலின் போது, அவதானம் செலுத்தப்பட்டிருந்தது.

கொழும்பு துறைமுகத்தின் நெரிசலைக் குறைக்கும் வகையில் தற்போது சுங்கத் திணைக்களத்தினால் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள 950க்கும் அதிகமான கொள்கலன்களை தாமதக் கட்டணமின்றி விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்கலன்களில் அரிசிக்கு மேலதிகமாக மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இதற்கமைய, முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் கொள்கலன்கள் விடுவிக்கப்படும் என குறிப்பிட்டார்.

இதன்போது, கருத்துரைத்த அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, குறித்த கொள்கலன்களுக்கு தாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.

அத்துடன், இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *