ஸ்பெயினில் கொட்டித் தீர்த்த கனமழை

மேட்ரிட், ஓக.13

ஸ்பெயின் நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிலச்சரிவு காரணமாக வீடுகள், வாகனங்கள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. ஸ்பெயினில் உள்ள டோரெவிஜா நகரில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், அங்கு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வாகன ஓட்டிகள் பலர் சிக்கிக் கொண்டனர்.

அடுத்த சில தினங்களுக்கு ஸ்பெயினில் மழை தொடர வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை மீட்கும் நடவடிக்கைகளை ஸ்பெயின் அரசு தீவிரப்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *