
கண்டி, ஓக.13
பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் கல்வி கற்ற நிலையில் காணாமல் போன மாணவனொருவர் 10 நாட்களின் பின்னர், மீண்டும் பல்கலைக்கழகத்துக்கு வருகைத் தந்துள்ளார்.
பொறியியல் பீடத்தில் கல்வி கற்கும் இந்த மாணவர், இந்த மாதம் இரண்டாம் திகதி கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, காணாமல் போயிருந்த நிலையில், பல்கலைக்கழகத்துக்கு திரும்பி வந்துள்ளார் என பல்கலைக்கழகத்தின் உப பீடாதிபதி தெரிவித்துள்ளார்.