உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு சிறுத்தைப்புலி குட்டிகள் தாய் சிறுத்தையிடம் ஒப்படைப்பு

அட்டன் – டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு சிறுத்தைப்புலி குட்டிகளை தனது தாய் சிறுத்தைப்புலியிடமே வனவிலங்கு அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.

பிறந்து பத்து நாட்களே ஆன உடல் ஆரோக்கியத்துடன் ஆண் மற்றும் பெண் என இரண்டு சிறுத்தைக் குட்டிகள் இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் தேயிலை மலையில் அடிப்பகுதியில் இருப்பதை வேலை செய்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் கண்டுள்ளனர்.

இதயடுத்து வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சிறுத்தைப்புலி குட்டிகளை பாதுகாப்பாக மீட்டு தாய்புலிக்கு கொண்டு செல்ல தேவையான நடவடிக்கையை எடுத்தனர்.

அதனையடுத்து சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு தாய் சிறுத்தை தனது குட்டிகளை வனப்பகுதிக்கு எடுத்து சென்றதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *