உக்ரைனுக்கு மேம்பட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களை வழங்க நேட்டோ நாடுகள் உறுதி!

ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு நேட்டோ தலைமையிலான நட்பு நாடுகள், உக்ரைனுக்கு மேம்பட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்துள்ளன.

பிரித்தானியா, கனடா, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உறுதியளித்த ஆயுதங்களில் ஏவுகணைகள் மற்றும் ரேடார்களும் அடங்கும்.

முன்னதாக அமெரிக்காவும் இதேபோன்ற உறுதிமொழியை வழங்கியது. ஜேர்மனியில் இருந்து ஒரு உயர் தொழில்நுட்ப அமைப்பு ஏற்கனவே உக்ரைனில் உள்ளது.

50 நாடுகளைச் சேர்ந்த உக்ரைனின் நட்பு நாடுகள் பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் சந்திக்கும் போது இந்த உறுதிமொழிகளை வழங்கின.

திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் ரஷ்யா 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியது மற்றும் டஸன் கணக்கான ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தியது.

ரஷ்யாவின் இந்த தாக்குதல்களின் போது, ஆற்றல் உட்கட்டமைப்பு மற்றும் பிற இராணுவம் அல்லாத இலக்குகள் குறிவைக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் முதல் நாள் தாக்குதலில் குறைந்தது 19 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *